Monday, January 2, 2012

கே.ஈ.சி.டியின் ஆலோசனைக் கூட்டம்!

கீழக்கரையில் மார்க்கம் மற்றும் சமுதாயப் பணிகளை கடந்த 12 வருடமாக செய்து வரும் கீழக்கரை கல்வி தர்ம அறக்கட்டளையின் (கே.ஈ.சி.டி) KILAKARAI EDUCATIONAL AND CHARITABLE TRUST (KECT) நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலரும் (Managing Trustee) பொதுச் செயலாளருமான ஸெய்யது அபூபக்கர் (தொண்டியப்பா) அவர்கள் தலைமையில் கடந்த 31.12.2011 சனிக்கிழமை காலையில் நடைபெற்றது.

இதில் இணைய செயலாளர் ஜமீல் முஹம்மது, ரஃபி அஹ்மது, S.Y.N.ஷிஹாபு, ஃபைரூஸ், இக்பால், அஜ்மல்கான், ஆஸிஃப், அபூபக்கர் ஆலிம் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

இதில் கே.ஈ.சி.டியின் செயல்பாடுகள் குறித்து கூட்டத் தலைவர் ஃபைரூஸ் முன்னிலையில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. வரும் 2012 வருடத்திற்கான செயல்பாடுகளை சீர்படுத்துவதற்கான ஏற்பாடுகள் குறித்து பொதுச் செயலாளர் அபூபக்கர் விளக்கமாக கூறினார்.

 கடந்த 28.12.2012 அன்று அபூபக்கர் (தொண்டியப்பா) தலைமையில் நடத்தப்பட்ட முதல் ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது.
 
நம் கீழக்கரை கல்வி தர்ம அறக்கட்டளையின் நிர்வாகம் கீழ் காணும் முறையில் செயல்படுத்தப்படும்.

மேலாண்மைக் குழு

1) முஹம்மது மன்சூர் (தலைவர்)
2) ஸெய்யது அபூபக்கர் (எ) தொண்டியப்பா (பொதுச் செயலாளர்)
3) S.M.A.ஜமீல் முஹம்மது (இணைச் செயலாளர்)

நிர்வாகத் தலைவர் : அஜ்மல்கான்

பொறுப்பாளர்கள்

1) கல்வி உதவி  மருத்துவ உதவி மற்றும் இதர உதவிகளுக்கு : இன்ஜிநியர் ஜபருல்லாஹ்கான

2) வட்டியில்லா கடனுதவி : அப்துஸ் ஸமது

3) தஃவா (தெருமுனை, ஜும்ஆ மற்றும் பிரசுரங்கள்) : ஆஸிஃப்

4) நன்கொடை, சந்தா மற்றும் இதர வசூல் : ருஸ்தான்

5) தொழுகை மற்றும் கணக்கு வழக்கு பொறுப்பு : அபூபக்கர் ஆலிம்.

நிர்வாகத்தின் குறை நிறைகளை சகோதரர் அஜ்மல்கான் (944 44 54 382) அவர்களிடம் தெரிவிக்கலாம்.

No comments:

Post a Comment